வளவனூர் அருகே கபடி போட்டி

வளவனூர் அருகே கபடி போட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வளவனூர் அருகே கபடி போட்டி
Published on

வளவனூர்

வளவனூர் அருகே உள்ள ராம்பாக்கம் காலனியில் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கபடி போட்டி நடைபெற்றது. இதை வளவனூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்கரட் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வளவனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 15 ஆண், பெண் ஆணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com