நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது

நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது
நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது
Published on

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் நேற்று பகல் 11.30 மணிக்கு ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது தஞ்சை பகுதியிலிருந்து சரக்கு ரயில் வந்தது. பின்னர் சரக்கு ரயில் என்ஜின் திசைமாற்றும் பணி நடந்தது. இதனால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சரக்கு ரயில் என்ஜின் மாற்றப்பட்டு அங்கிருந்து புறப்பட்டது. பின்னர் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டன. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com