புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பாளையங்கோட்டை:

நெல்லையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பெண் தற்கொலை

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மனைவி கார்த்திகா (வயது 30). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் கார்த்திகா சாப்பிட வரவில்லையாம். இதனால் உறவினர்கள் மாடியில் உள்ள அவரின் அறைக்கு சென்றனர்.

ஆனால் அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கார்த்திகா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆவதால் இதுபற்றி நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com