வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

ஜூலை 1-ந் தேதி முதல் வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு அமலுக்கு வருகிறது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

ஜூலை 1-ந் தேதி முதல் வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பட்ஜெட்டின் போது வருமான வரி சட்டத்தில் 206 ஏ.பி. மற்றும் 206 சி.சி.ஏ. ஆகிய 2 பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதன்படி, ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ். (வருமான வரி பிடித்தம்) வசூலிக்கப்படும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக பான் எண் (நிரந்தர கணக்கு எண்) கொடுக்க வேண்டும். அப்படி பான் எண் கொடுக்கவில்லை என்றால் அதிக வரி பிடிக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர் கண்டிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், இனி இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். இந்த புதிய சட்டப்பிரிவு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com