25-வது நாளாக உயிரிழப்பு இல்லை: தமிழகத்தில் 28 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 25-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
25-வது நாளாக உயிரிழப்பு இல்லை: தமிழகத்தில் 28 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

நேற்று புதிதாக 17 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் தலா 14 பேர் உள்பட 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 10 பேர் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பதிவாகி உள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 12 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளன. இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் தொடர்ந்து 25-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 229 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 21 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

27 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 14 ஆயிரத்து 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com