எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது - அமைச்சர் உதயகுமார் கருத்து

எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது என்று அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது - அமைச்சர் உதயகுமார் கருத்து
Published on

மதுரை,

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு முதல் பரிசாக தலா ஒரு கார் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைப்பார்கள்; சிறந்த வீரர் மற்றும் காளைக்கு அவர்கள் காரை பரிசாக வழங்குவார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியும் என்று தெரிவித்தார்.

பின்னர் தை பிறந்தால் வழிபிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், தை அல்ல பங்குனியோ, மாசியோ பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வராது. ஸ்டாலினுக்கு வழி எப்போதும் பிறக்காது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com