தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
Published on

சென்னை,

தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் தினந்தோறும் 3 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வேண்டும் என்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். கொரோனா 3வது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், ஆக்சிஜனை சேமிப்பது மிக அவசியம்.

தொற்றின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்தபிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து யோசிக்கலாம். தற்போது ஆக்சிஜனை சேமிக்கலாம். அதனால், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com