யாரும் ராஜினாமா செய்ய சொல்லவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

காவல்துறை தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
யாரும் ராஜினாமா செய்ய சொல்லவில்லை -  அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Published on

கோவை,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

தமிழக வெற்றிக் கழகத்தில் சேர வற்புறுத்தியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், யார் அழைத்தார்கள், யார் வற்புறுத்தினார்கள் என்பதை அவர் தெளிவாகக் கூற வேண்டும் என்றும், ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசியிருக்கிறார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மக்கள் இயக்கமாக நடத்திய அதிமுகவை, எடப்பாடி பழனிசாமி கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருவதாக விமர்சித்தார். இதனால்தான் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடத்தை முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார் என்றும், கோவையில் இடவசதி குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com