விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மூதாட்டி பிணம்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்தார்.
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மூதாட்டி பிணம்
Published on

விழுப்புரம் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் முன்பு 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விரைந்து வந்து மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்?என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com