முதியவர் விஷம் குடித்து தற்கொலை

கலவை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அல்லாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் (வயது 70). இவர், வீட்டில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கலவை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com