விஷம் குடித்து முதியவர் தற்கொலை

மணல்மேடு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

மணல்மேடு;

மணல்மேடு அருகே கொற்கை வரக்கடை சன்னதி தெருவை சேர்ந்தவர் பாவாடை (வயது70). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் பாவாடை வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள பழவாற்றாங்கரையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com