ஒண்டிவீரன் நினைவு தினம்

கீழ்பென்னாத்தூரில் ஒண்டிவீரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஒண்டிவீரன் நினைவு தினம்
Published on

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் ஒண்டிவீரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிர் தியாகம் செய்த முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரன் நினைவு நாள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சோபா தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர்ஜோசப், அருந்ததியர் மக்கள் நலச் சங்க நகர தலைவர் அந்தோணிசாமி, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் அதியவளவன், ராஜு, முனியன், அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்க மாநில துணைபொதுச் செயலாளர்சுப்பிரமணி, மாநிலமருத்துவர் அணிசெயலாளர் டாக்டர்சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com