திண்டிவனத்தில்தீக்குளித்து வாலிபர் தற்கொலைதிருமணம் ஆகாத ஏக்கத்தில் விபரீத முடிவு

திண்டிவனத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தீக்களித்து தற்கொலை செய்து கெரண்டார்.
திண்டிவனத்தில்தீக்குளித்து வாலிபர் தற்கொலைதிருமணம் ஆகாத ஏக்கத்தில் விபரீத முடிவு
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் பாரத் (வயது 34). திருமணம் ஆகாதவர். திருமணம் நடைபெறாததால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில் சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இது குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com