வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி
Published on

தர்மபுரி குண்டல்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் 50 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து அவர் இறந்திருப்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவருடைய உடலை மீட்ட போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com