தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்தால் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து பாதிப்பு...!

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக மலை ரெயில் புறப்பட்டு சென்றது.
தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்தால் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து பாதிப்பு...!
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் ,கல்லாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் மேட்டுப்பாளையம் காட்டூர் ரெயில்வே கேட் அருகே ரெயில் பாதையோரத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரெயில் பாதையில் குறுக்கே விழுந்தது. அதேபோன்று கல்லாறு ரெயில்வே கேட் அருகில் மரம் சாய்ந்து ரெயில் பாதையின் குறுக்கே விழுந்தது.

இதன் காரணமாக ஊட்டி மலை ரெயில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து ரெயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் பாதையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு துண்டு துண்டாக வெட்டி அகற்றி ரெயில் பாதை சீரமைக்கப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய ரெயில் பாதையை சீரமைக்கும் பணி காலை 9 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய மலை ரெயில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com