பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி வடலூரில் நாளை நடக்கிறது

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நாளை வடலூரில் நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி வடலூரில் நாளை நடக்கிறது
Published on

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 'அரும்புகள்' என்ற சிறப்பான சேமிப்பு கணக்கு திட்டத்தை தொடங்குவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், மாபெரும் ஓவியப் போட்டி 3 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்காக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல் நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் முதல் பிரிவில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மற்றும் 2-வது பிரிவில் 1, 2-ம் வகுப்பும், 3-வது பிரிவில் 3 முதல் 6-ம் வகுப்பு வரையும், 4-வது பிரிவில் 7, 8-ம் வகுப்பும், 5-வது பிரிவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் தனித்தனியாக ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஓவிய போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள், வங்கியின் விளம்பர பலகை, பள்ளியின் விளம்பர பலகை மற்றும் வாட்ஸ்-அப் மூலமாகவும், நோட்டீசில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், ஆன்லைனில் விண்ணப்பித்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com