கியாஸ் சிலிண்டர் வெடித்து பானிபூரி வியாபாரி பலி

சேத்துப்பட்டு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து பானிபூரி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
கியாஸ் சிலிண்டர் வெடித்து பானிபூரி வியாபாரி பலி
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே உள்ள மோதனபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 34). இவரது மனைவி புவனேஸ்வர். இவர்களுக்கு சுபித்ரா (4) என்ற மகளும், கோகுல் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

கங்காதரன் ஜோதிமா நகர் பகுதியில் பானிபூரி கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கடைக்குள் இருந்த சிலிண்டர் டியூப்பில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. அப்போது சிலிண்டர் வெடித்தில் கங்காதரனுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com