மாதவ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்

திருவெண்காடு அருகே நாங்கூர் மாதவ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது.
மாதவ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்
Published on

திருவெண்காடு;

திருவெண்காடு அருகே நாங்கூரில் மாதவ பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டு பவித்ர உற்சவம் தொடங்கியது. இதையொட்டி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாச பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com