30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துங்கள்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்


30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துங்கள்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
x

சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் வருகிற 30-ம் தேதிக்குள் நடப்பு சொத்துவரியினை செலுத்துவதன் மூலம், மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பை தவிர்க்கலாம்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய (I/2025-26) சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்தி, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு-84(2)ன்படி, மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், அரசு இ-சேவை மையங்கள், இணையதளம் மூலமாகவும் மற்றும் RTGS/NEFT, Pay-tm, நம்ம சென்னை செயலி, கிரெடிட், டெபிட், UPI Service, பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை இயந்திரம் மூலமாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியால் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்ட QR Code மூலமாகவும் மற்றும் WhatApp எண்- 9445061913 மூலமாகவும் செலுத்தலாம்.

சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரியினை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகர வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story