

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அவரது முழு உருவச்சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், முன்னாள் தலைவர் பொன்அறிவழகன், பேரூர் செயலாளர் ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.