விழுப்புரத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.
விழுப்புரத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நிர்வாகி பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டமானது, கடந்த ஜனவரி முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி தவணையை உடனே வழங்க வேண்டும் என்றும், குடும்ப பாதுகாப்பு நிதி சந்தாவை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு சரவணபாண்டியன், மாவட்ட செயலாளர் நெடுமாறன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர். சங்க நிர்வாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com