ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நாமக்கல்லில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதில் ஓய்வுபெற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்பன், மணியாரன், குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையான அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிலுவை வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். நியாயமான பென்சன், உரிய மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதி அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com