மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
Published on

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த 343 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலால் உதவி ஆணையர் பானு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com