தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம்

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் நடந்தது.
தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம்
Published on

கரூர்,

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் எனது குப்பை - எனது பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் பணி மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் வெங்கமேடு செங்குந்தர் நகர் மற்றும் ராயனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com