பேரறிவாளன் விடுதலை: கவர்னரை சந்தித்து தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக கவர்னரை சந்தித்து தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை: கவர்னரை சந்தித்து தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாட்களில் தமிழக கவர்னர் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தான் ஏற்கனவே அமைச்சரவையில் முடிவு செய்து கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி 2 ஆண்டு ஆகியுள்ள நிலையில், இந்த மிக மிக முக்கிய தருணத்தில் கவர்னரைச் சந்தித்து பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும் பெரிய அழுத்தம் கொடுக்கும் வகையில் தங்கள் கருத்துகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com