சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்துக்குள் அனுமதி - மத்தியஅரசு உத்தரவாதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்துக்குள் அனுமதி - மத்தியஅரசு உத்தரவாதம்
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுவித்து சுப்ரீம் கேர்ட்டு உத்தரவிட்டது. அதில், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிக்க தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை ஐகேர்ட்டில் சாந்தன் வழக்கு தெடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கெண்ட டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், ''திருச்சி சிறப்பு முகாமில் உள்ள சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இந்த ஆவணங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. தற்போது ஐகேர்ட்டில் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறேன். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும், என்றார். இதையடுத்து, வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com