உத்தமபாளையம் அருகே பரிதாபம்: தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி பச்சிளங்குழந்தை பலி

உத்தமபாளையம் அருகே தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி பச்சிளங்குழந்தை பரிதாபமாக இறந்தது.
உத்தமபாளையம் அருகே பரிதாபம்: தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி பச்சிளங்குழந்தை பலி
Published on

உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 30). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கவிதா (24). இந்த தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கவிதா 3-வது முறையாக கர்ப்பமானார். கடந்த 22 நாட்களுக்கு முன்பு கவிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நேற்று இவர், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார்.

பின்னா அவர், குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தையின் மூக்கு வழியே தாய்ப்பால் வடிந்த நிலையில் மயங்கி கிடந்தது. இதைக்கண்ட கவிதா பதறி அடித்து குழந்தையை தூக்கி கொண்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைக்கேட்டு கவிதா கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது தெரியவந்தது. பிறந்து 22 நாட்களே ஆன குழந்த மூச்சுத்திணறி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com