மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Published on

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு துறை சார்பில் மயிலம்பட்டி, சிந்தாமணிபட்டி சாலையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் அசாருதீன், கோகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டு மேற்கண்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். இதில், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com