கொள்ளை வழக்கில் ஆஜராகாததுணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு

கொள்ளை வழக்கில் ஆஜராகாததுணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சுரேஷ்குமார். இவர் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2017-2018-ம் ஆண்டுகளில் பரமத்தியில் நடந்த 2 கொள்ளை தொடர்பான வழக்கு பரமத்தி கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சுரேஷ்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து பரமத்தி சார்பு கோர்ட்டு நீதிபதி பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்டு மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com