நெல்லையில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு


நெல்லையில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
x

பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெல்லை மாநகரில் நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகர போலீஸ் சட்டம்-1997 பிரிவு 41 (2)-ன் படி நெல்லை மாநகர பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story