விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கராபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கராபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கராபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக கொடி அணிவகுப்பு நடந்தது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் நடந்த இந்த கொடி அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் போலீசார் மற்றும் அதிரடி படையினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொடி கொடி அணிவகுப்பானது, பூட்டைரோடு, போலீஸ் லைன் தெரு, மீனவர் தெரு, பங்களா தெரு, கடைவீதி வழியாக மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது போலீசார் விநாயகர் சதுர்த்தியை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com