தபால்காரர் தவறவிட்ட பணத்தை மீட்ட போலீசார்

தபால்காரர் தவறவிட்ட பணத்தை போலீசார் மீட்டனர்.
தபால்காரர் தவறவிட்ட பணத்தை மீட்ட போலீசார்
Published on

விருதுநகர் தலைமை தபால் நிலையத்தில் தலைமை தபால்காரராக இருப்பவர் சுப்பையா. இவர் தபால் பட்டுவாடாவுக்கு செல்லும் பொழுது பணியாளர் பணம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்தை தவற விட்டுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விருதுநகர் முனிசிபல் ஆபீஸ் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்க்கும் போது 68 வயது மதிக்கத்தக்க ஒருவர் இந்த பணத்தை எடுத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து பணத்தை மீட்டனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமை தபால்காரர் சுப்பையாவிடம் அவர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com