பொங்கல் பண்டிகை: 4,529 சிறப்பு பேருந்துகளில் 1.89 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் - போக்குவரத்துத்துறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 4,529 சிறப்பு பேருந்துகளில் 1.89 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும், விடுமுறைக்குப் பிறகு ஊர் திரும்புவதற்காகவும் தமிழக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என ஜனவரி 11(நேற்று) முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 4,529 சிறப்பு பேருந்துகளில் 1.89 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம், இரவு ஊரடங்கு, போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com