பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தயார்: ஓரிரு நாளில் வழங்க ஏற்பாடு

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தயார்: ஓரிரு நாளில் வழங்க ஏற்பாடு
Published on

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு, கரும்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்கான கொள்முதல் நடந்து வருகிறது.

இதற்கிடையே பொங்கல் தொகுப்பை கூட்ட நெரிசல் இன்றி ரேஷன் கடைகளில் வழங்கும் வகையில் டோக்கன் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, யார், யார் எப்போது வந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் தரப்பட்டுள்ளது.

இந்த டோக்கன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகு கார்டு வாரியாக தேதி, நேரம் குறிப்பிட்டு பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட இருக்கிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் நடக்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com