பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி-போரூர் இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
Published on

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

இதில் பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் கடந்த மார்ச் 20-ந்தேதி முதற்கட்டமாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ந்து இதே வழித்தடத்தில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி நடைபெற்றது.

இந்நிலையில், பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கடந்த முறை அப் லைனில்(Up line) சோதனை ஓட்டம் நடந்த நிலையில், இந்த முறை டவுன் லைனில்(Down line) சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி-போரூர் இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com