பேரூர், நெம்மேலி பகுதிகளில் நாளை மின்தடை

உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
பேரூர், நெம்மேலி பகுதிகளில் நாளை மின்தடை
Published on

கண்ணகப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து கோவளம் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதனால் அன்றைய தினம் சூலேரிக்காடு, பேரூர், நெம்மேலி, புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, தெற்குப்பட்டு, திருவிடந்தை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மறைமலைநகர் கோட்ட பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com