தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை
Published on

தியாகதுருகம்

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் நேற்று சோமவார பூஜை மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி, எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர், வடதொரசலூர் பெரியநாயகி உடனுறை பழமலைநாதர், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர், குடியநல்லூர் கைலாசநாதர், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com