சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி கைது
Published on

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது. இங்கு பூசாரியாக திலகர் (வயது 70) என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் கோவில் முன்பு 10 வயது சிறுவனும், அவனுடைய தங்கையான 7 வயது சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பூசாரி திலகர், சிறுமியை கோவிலில் உள்ள தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவில் முன்பாக திரண்டனர். இதனை சற்றும் எதிர்பாராத பூசாரி அவர்கள் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி கோவிலை பூட்டிக் கொண்டு உள்ளே ஒளிந்து கொண்டார்.

இதனை அடுத்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கோவிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூசாரி திலகரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com