நோ பார்க்கிங் போர்டுகள் - "இனி சட்ட நடவடிக்கை பாயும்" - ஐகோர்ட்டு அதிரடி

அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள் மற்றும் தடுப்புகள் வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நோ பார்க்கிங் போர்டுகள் - "இனி சட்ட நடவடிக்கை பாயும்" - ஐகோர்ட்டு அதிரடி
Published on

சென்னை,

சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் பல வீடுகளின் முன் அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com