தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பரமத்தி வேலூர்

தனியார் நிறுவன ஊழியர்

பரமத்தி வேலூர் தாலுகா, படமுடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 38). இவரது மனைவி பொன்னிமணி (33). மோகன்ராஜ் பரமத்தி வேலூரில், சேலத்தில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அவரது தந்தை சாலை விபத்தில் இறந்ததால் விபத்து நிவாரணத் தொகை ரூ.1.50 லட்சம் அவருக்கு கிடைத்தது.

அந்த பணத்தை வைத்துக்கொண்டு மோகன்ராஜ் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவியே இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் மோகன்ராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து அவர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் மோகன்ராஜ் சேலையால் மின்விசிறியின் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னிமணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

விசாரணை

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மோகன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீசார் மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com