தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

அரக்கோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

அரக்கோணம் வடமாம்பாக்கத்தை சேர்ந்தவர் துருகன் (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். துருகனுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் துருகன் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த போது மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத போது துருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com