தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லையில், 25-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Published on

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மாதம் தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் வந்து முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் மரியசகாய ஆண்டனி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com