

சென்னை,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கர்நாடக சிறைத்துறையில் பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார். அவரை நேரில் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
இளவரசியின் பரோல் மனு ஆய்வில் உள்ளது என சிறை அதிகாரி தகவல் தெரிவித்த நிலையில், அவருக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.