பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் மனு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் மனு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
Published on

சென்னை,

ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2021 ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு எதிராக பண மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்த நிலையில், பப்ஜி மதனை சைபர் சட்ட குற்றவாளி என அறிவித்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதனிடையே கொரோனா நிவாரண நிதிக்காக பல நபர்களிடம் ரூ.2.89 கோடி பணம் வசூலித்து, அதை மோசடி செய்து சொகுசு கார்கள், நகைகள் வாங்கியதாக பப்ஜி மதனின் வங்கிக் கணக்கும், அவரது மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கி கணக்கு முடக்கம் குறித்து முன் கூட்டி தெரிவிக்கவில்லை என்றும் நீண்ட காலத்துக்கு கணக்கை முடக்கி வைப்பது சட்டப்பூர்வ உரிமையை பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டு வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கக் கோரி மதனின் மனைவி கிருத்திகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு எதிராக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ. 1.01 கோடி யாருக்கு சொந்தமானது என்பது சாட்சி விசாரணைக்கு பின் தான் தெரியவரும் என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் தெரிவித்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து புலன் விசாரணை அதிகாரி முன்கூட்டி நோட்டீஸ் அனுப்பினால், அது ஆதாரங்களை அழிக்க வழி வகுத்து விடும். எனவே முடக்கம் குறித்து நோட்டீஸ் அளிக்க அவசியமில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர். மேலும் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க கோரி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக கிருத்திகாவிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com