பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் அடிப்படை வசதி கோரி என மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். முன்னதாக 22 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பணி காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்கள் 2 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com