புதுக்கோட்டை ஓவியர் மாருதி காலமானார்

புதுக்கோட்டை ஓவியர் மாருதி காலமானார்.
புதுக்கோட்டை ஓவியர் மாருதி காலமானார்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மாருதி (வயது 86). இவர் பள்ளி படிப்பை புதுக்கோட்டை நகரிலும், கல்லூரி படிப்பை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் படித்தார். ஓவியத்தின் மீது தனக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்த ஏதுவாக தனது 21-வது வயதில் சென்னைக்கு சென்றார். அங்கு முதலில் சினிமா போஸ்டர்களுக்கான பணிகளை செய்து வந்தார். பல்வேறு வார இதழ்கள், பத்திரிகைகளில் வந்த கதைகளுக்கு ஏற்ப ஓவியம் வரைந்து தரும் பணியில் சேர்ந்து ஏராளமான ஓவியங்களை வரைந்தார். பல ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்து ஓவியத்துறைக்கு பெருமை சேர்த்தார். இவரின் ஓவிய திறமையை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. புதுக்கோட்டையில் பிறந்து உலகப்புகழ் பெற்ற ஓவியராய் திகழ்ந்து, பல ஓவியங்களை உயிருள்ள ஓவியமாக படைத்தார். இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேயில் அவரது மகள் வீட்டில் வசித்து வந்த மாருதி காலமானார். ஓவியர் மாருதி உடல் இன்று (வெள்ளிக்கிழமை) புனேயில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com