கழுகுமலை பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

கழுகுமலை சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கழுகுமலை பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
Published on

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 10.30 மணியளவில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அக்கினி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் எள், எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com