குமரியில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

குமரி மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படவில்லை என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
குமரியில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் ஐ.டி.ஐ.யில் ரூ.3.73 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கனிமவளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆட்சிக் காலத்தில் 39 குவாரிகள் செயல்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை.

குமரி மாவட்டத்தில் எடுக்கப்படுகின்ற கனிம வளங்கள் அனைத்தும் குமரி மாவட்டத்திற்கு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படவில்லை. கனிமவளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே மேடையில் பேச தயாராக உள்ளாரா? ஆனால் நான் தயாராக உள்ளேன். நேருக்கு நேர் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com