ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் தனி விமானத்தில் இன்று பயணம்

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் இன்று பதவியேற்கும் நிலையில், அவர்களது பதவியேற்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் தனி விமானத்தில் இன்று பயணம்
Published on

சென்னை,

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியாக கமல்நாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த 2 முதல்-மந்திரிகளின் பதவியேற்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. தங்களது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு இருவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனித்தனியாக அழைப்பு விடுத்திருந்தனர். அதனை ஏற்று, மு.க.ஸ்டாலின் இன்று 2 முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.

சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு தனி விமானத்தில் செல்லும் மு.க.ஸ்டாலின் நேராக ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு செல்கிறார். அங்கு காலை 10 மணிக்கு அசோக் கெலாட் முதல்-மந்திரியாக பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

அதன்பிறகு, அங்கிருந்து மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு செல்கிறார். அங்கு மதியம் 1.30 மணிக்கு கமல்நாத் முதல்-மந்திரியாக பங்கேற்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். கமல்நாத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவர், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com