ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரன் இன்று பரோலில் விடுவிப்பு?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதியான ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருந்து இன்று பரோலில் வெளியே செல்ல இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரன் இன்று பரோலில் விடுவிப்பு?
Published on

மதுரை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ சிகிச்சை தொடர்பாக 30 நாள் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து ஐகோர்ட்டிலும் வழக்கு தொடாரப்பட்டது. மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரவிச்சந்திரனின் தாயார் தரப்பில் பரோல் குறித்து மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று (செவ்வாய் கிழமை) அல்லது நாளை (புதன்கிழமை) சிறையில் இருந்து பரோலில் வெளியே செல்ல இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com